கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

மதமாற்றம் செய்பவர்கள் என்றசந்தேகத்தின் பேரில் 2 கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி உத்கல் விரைவு ரயிலில் ஹரித்துவாரில் இருந்து ஒடிசாவில் உள்ள புரிக்கு 2 கன்னியாஸ்திரிகளும் அவர்களுடன் 2 பேரும் சென்றனர். அப்போது, அந்த 4 பேரையும்சூழ்ந்து கொண்டு சிலர் துன்புறுத்தி உள்ளனர். கன்னியாஸ்திரிகள் 2 பேரும் மத மாற்றம் செய்பவர்கள் என்றும் அவர்களுடன் சென்ற 2 பேரை மதமாற்றம் செய்யவே அழைத்து செல்வதாகவும் அவர்கள் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயிலில் இருந்து 4 பேரையும் இறங்கும்படி அவர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் ஜான்சி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்