துபாய்: இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 19.5 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணியின் பவுலர்கள் அசத்தலாக பந்து வீசி பாகிஸ்தானை கட்டுப்படுத்தி இருந்தனர்.
ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். இந்த போட்டியின் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளதாகவும், ரிஷப் பந்தை மிஸ் செய்துள்ளதாகவும் டாஸின் போது தெரிவித்தார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்