கால்பந்து திருவிழாவுக்காக பிரம்மாண்டமான உட்கட்டமைப்புகள்: 220 பில்லியன் டாலர் செலவில் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நடத்தும் 22-வது உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இந்த ‘கால்களின்’ திருவிழாவை பிரம்மாண்டமாக நடத்த கத்தார் முழு அளவில் தயாராகி உள்ளது. இதற்காக கத்தார் சுமார் 12 ஆண்டுகளை செலவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த நாடுகளை பின்னுக்குத்தள்ளி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது கத்தார்.

வரலாற்றில் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தார் உலக கோப்பை கால்பந்து திருவிழாவை நடத்துகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இதில் கலந்து கொண்டுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ‘ஏ’-ல் போட்டியை நடத்தும் கத்தாருடன், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்