24 ஆண்டுகள், 34,357 ரன்கள்: 2013-ல் இதே நாளில் சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து விடைபெற்ற சச்சின்

கிரிக்கெட் உலகின் மகத்தான வீரர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இவரை கிரிக்கெட்டின் கடவுள் என போற்றுவர். அவர் இதே நாளில் கடந்த 2013 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சாதனைகளை இந்த தருணத்தில் கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.

முன்பெல்லாம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ரசிகர்கள் பலரும் சச்சின் அவுட் என்றால் டிவியை ஆஃப் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள். ஏனெனில், சச்சின் அவுட் என்றால் இந்தியா ஆட்டத்தில் தோல்வி என அர்த்தம். அந்த அளவிற்கு அட்டகாசமான ஆட்டக்காரர் அவர். காலப்போக்கில் அது மாறி இருந்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்