மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்ற நிலையில் நாளை மறுநாள் மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.
இலங்கை தொடருக்கு பின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரண்டு தொடர்களும் இந்தியாவில் நடக்கவுள்ளன. இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்