சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் போன்ற ‘சோ கால்டு’ ஸ்டார்கள் பல்லிளிக்க அஸ்வின் அவர்களுக்கெல்லாம் பாடம் எடுக்கும் ஒரு தரமான இன்னிங்ஸை ஆடி இந்திய அணியை 144/6 என்ற சரிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்தார். ஜடேஜா கிளாசிக் டெஸ்ட் ஸ்டைலில் தொடங்கி பிறகு அவரும் அஸ்வின் அதிரடி ஜோதியில் கலந்தார்.
பிட்சில் ஈரப்பதம், வானிலையும் மேகமூட்டமாக இருந்ததால் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்பிடம் சிக்கிச் சின்னாபின்னமாவதைத் தவிர்க்க இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார் ஷாண்டோ. அவர் முடிவு பலன் அளித்தது, ஆனால் பிற்பாடு கோட்டை விட்டு விட்டார். ஆட்டத்தின் பிடி இப்போது வங்கதேசத்திடமிருந்து நழுவி விட்டது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்