20.6 கோடி பார்வைகளுடன் சாதனை படைத்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி | சாம்பியன்ஸ் டிராபி

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி கடந்த பிப்.23 அன்று இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியை 20.6 கோடி தொலைக்காட்சி பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

உலகக் கோப்பையைத் தவிர, இது ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) வரலாற்றில் 2-வது அதிகம் பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டி என்று பெருமையை பெற்றுள்ளது. 2023 உலகக் கோப்பையில் நடந்த போட்டியை விட இது 10% அதிகமான ரேட்டிங் பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டி 2609 கோடி நிமிட தொலைக்காட்சி பார்வை நேரத்தையும் எட்டி சாதனை படைத்துள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்