ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

துபாய்: ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது இந்​திய அணி. துபா​யில் நேற்று நடை​பெற்ற அரை இறுதி ஆட்​டத்​தில் டாஸ் வென்று ஆஸ்​திரேலிய அணி பேட்​டிங் செய்​தது. அந்த அணி​யில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்​சர் ஜான்​சன் ஆகியோ​ருக்கு பதிலாக கூப்​பர் கானொலி, தன்​வீர் சங்கா ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர்.

ஆட்​டத்​தின் முதல் பந்தை இந்​தி​யா​வின் முகமது ஷமி வைடாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்தை ஆஸ்​திரேலிய அணி​யின் டிரா​விஸ் ஹட் லெக் திசை​யில் அடிக்க முயன்​றார். ஆனால் பந்து அவரது மட்​டை​யில் பட்டு ஷமியை நோக்கி வந்​தது. அதை வலது கையால் ஷமி பிடிக்க முயன்ற போது நழுவி கீழே விழுந்​தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்