அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை அணியில் தடை நீங்கி ஹர்திக் பாண்டியா களமிறங்குவதால் அந்த அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர். இந்த ஆட்டத்தில் தடை காரணமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. தற்போது தடை முடிந்து அவர், திரும்பியிருப்பது அணியின் சமநிலையை அதிகரிக்கச் செய்யக்கூடும். மேலும் அந்த அணி ஒருவார ஓய்வுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்