சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 191 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் பிரப்சிம்ரன் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பஞ்சாப் அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் 10 ஆட்டங்களில் 8-வது தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்