ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் சென்னையில் இருந்து மாற்றம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் சீசன் போட்டிகளை ஏற்கெனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் தற்போது சிறிய மாற்றம் கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரும் அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதியும், 2-வது போட்டி கொல்கத்தாவில் அக்டோபர் 10-ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதில் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தொடர்ந்து நவம்பரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்