லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இதன் மூலம் தன் மீதான விமர்சன கணைகளை அவர் தகர்த்துள்ளார்.
175 பந்துகளில் 127 ரன்கள் உடன் முதல் நாளை கேப்டன் ஷுப்மன் கில் நிறைவு செய்தார். இன்று மீண்டும் இரண்டாம் நாள் ஆட்டத்தை ரிஷப் பந்த் உடன் அவர் தொடர உள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆடுகளமும் அதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்