அக்டோபரில் இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்​டோபர் 30-ம் தேதி முதல் நவம்​பர் 27 வரை இந்​தி​யா​வில் நடை​பெறும் என சர்​வ​தேச செஸ் கூட்​டமைப்பு (ஃபிடே) அறி​வித்​துள்​ளது. போட்டி நடை​பெறும் நகரம் பின்​னர் அறிவிக்​கப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தத் தொடரில் 206 வீரர்​கள் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோது​வார்​கள். முதல் 3 இடங்​களை பிடிப்​பவர்​கள் 2026-ம்
ஆண்டு நடை​பெறும் ஃபிடே கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறு​வார்​கள். கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் வீரரே, உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பில் விளை​யாட தகுதி பெறு​வார். கேண்​டிடேட்ஸ் தொடரின் வெற்​றி​யாளர், தற்​போது உலக சாம்​பிய​னாக உள்ள இந்​தி​யா​வின் டி.கு​கேஷுடன் பலப்​பரீட்சை நடத்​து​வார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்