
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பலர் பங்கேற்று அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு சாகசம் செய்தனர். ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில், தாய்லாந்து, பங்களாதேஷ், சீனா, இந்தோனேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், கொரியா, மலேசியா, சிங்கப்பூர், திபெத், இலங்கை, குவைத், உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 102 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்