
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது.
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி 35-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி அணியை வீழ்த்தியது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்