புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணி 503 ரன் குவிப்பு

சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரில் டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர்​திறன் மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 90 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 265 ரன்​கள் எடுத்​திருந்​தது.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் ஆட்ட நேர முடி​வில் 180 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 503 ரன்​கள் குவித்​தது. விமல் குமார் 112, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 91, ஆந்த்ரே சித்​தார்த் 57, அஜிதேஷ் 101, அம்ப்​ரிஷ் 62 ரன்​கள் விளாசினர். ஜம்மு & காஷ்மீர் அணி தரப்​பில் குவல்​பிரீத் சிங், தஸிம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்