
கொழும்பு: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 88 ரன்களில் வீழ்த்தியது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இது இந்த தொடரில் இந்திய அணிக்கு இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த மாதம் 30-ம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி கடந்த 30-ம் தேதி அன்று தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் விளையாடியது. இதில் டிஎல்எஸ் முறையில் 59 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்