
கொழும்பு: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிரதிகா ராவல் 31 ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் டயானா பெய்க் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 248 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சித்ரா அமின் 81, நடாலியா பெர்வைஷ் 33, சித்ரா நவாஷ் 14 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த வீராங்கனையும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. இந்திய அணி தரப்பில் கிரந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்