
புதுடெல்லி: நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், புதன்கிழமை அன்று உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் இந்திய அணி வீராங்கனைகள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 52 ரன்களில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி. இந்த வெற்றியை தேசமே கொண்டாடி வருகிறது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்