72 மணிநேரம் கெடு: பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடி புகைப்பட விளம்பரங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய விளம்பர பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்தையும் அடுத்த 72 மணிநேரத்துக்குள் அகற்றத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி 30 தொகுதிகளுக்கு நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், கடும் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்