சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸின் மூத்தத் தலைவருமான அசோக் கெலாட்டுக்கு எழுபது வயதாகிறது. அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. தொற்றிலிருந்து மீண்ட பிறகும், உடல் ரீதியாக கடும் பாதிப்பை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்