மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுடன், புதுமுகங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அஸ்வின் தேர்வு செய்யப்படாததற்கான காரணங்கள், சர்ப்ரைஸ் மாற்றங்கள் உள்ளிட்டவற்றுடன், அணித் தேர்வு எப்படி இருக்கிறது என்பது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.
அடுத்த மாதம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள அணியில் இளம் முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தனது உடல்தகுதியை நிரூபித்து இருப்பதால் இந்தத் தொடர் மூலம் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்