தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-க்கு பூஜ்ஜியம் என ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இந்திய அணி தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தத் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், "உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், நம்மிடம் சமநிலையான பிளேயிங் லெவன் இல்லை. வழக்கமாக 6, 7 மற்றும் 8-ம் இடத்தில் விளையாடும் ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயத்தில் உள்ளனர். அவர்கள் மீண்டும் வரும்போது அணி இன்னும் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அணி சமநிலை பெறும்" என்று தெரிவித்தார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்