மும்பை: ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதன்படி, மார்ச் 27ம் தேதி தொடரை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் தொடரை ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ள ஸ்டார் நெட்வொர்க், 26ம் தேதிக்குப் பதிலாக ஒருநாள் முன்னதாக, 26ம் தேதி சனிக்கிழமை தொடரை தொடங்க கோரிக்கை விடுத்தது. நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்