ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வார்னரை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஐபிஎல் லீக் போட்டிகளை பொறுத்தவரை வார்னர் ஒரு ஜாம்பவான் வீரர். பல ஆண்டுகளாக தொடர்ந்து ரன்களை குவிக்கும் ஒரு வீரராக இருந்துவருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 150 போட்டிகளில் விளையாடி 5,449 ரன்களை எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார். டெல்லி அணியில் இணைந்துள்ளதை அடுத்து தனது நல்ல நண்பரும் ஹைதராபாத் அணி கேப்டனுமான கேன் வில்லியம்சனை மிஸ் செய்யப்போவதாக வார்னர் தெரிவித்துள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்