பஞ்சாப்: ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவர் ரமேஷ் குமார். அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டிருக்கும் ரமேஷ் குமாரின் கதை சற்று வித்தியாசமானது. வியப்புக்குரியதும் கூட.
செருப்பு தைக்கும் தந்தை, வளையல் விற்கும் தாய் என எளிமையான பின்னணி கொண்டவர் ரமேஷ் குமார். ஆனால், 23 வயதாகும் அவர் பஞ்சாப்பின் ஜலாலாபாத்தில் மிகப் பிரபலம். டென்னிஸ் பால் கிரிக்கெட்டே அவரை அந்தப் பகுதியில் தெரிந்த முகமாக்கி இருக்கிறது. அந்தப் பகுதியில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால், 'நரேன் ஜலலாபதியா' என்ற பட்டபெயர் கொண்டு ரமேஷ் அழைக்கப்படுவதுண்டு. டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக கிடைக்கும் தொகையை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த ரமேஷுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இப்போது ஐபிஎல் வரை கொண்டுவர அந்த வீடியோ காரணமாக இருந்துள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்