பெங்களூரு: 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் இரண்டாவது நாளாக பெங்களூருவில் இன்று தொடங்கியது. முக்கிய வீரர்களுக்கு மத்தியில் இளம் வீரர்களையும் அணிகள் ஆர்வமாக எடுத்தன.
கடைசிக்கு முந்தையை சுற்றில், நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் ரூ.80 லட்சத்துக்கு பெங்களூரு அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.1 கோடிக்கு வாங்கபட்டார். ரோவ்மேன் பவலை ரூ.2.8 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்திய வீரர் ரிஷி தவானை ரூ.55 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. தென்னாபிரிக்க ஆல் ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் ரூ.50 லட்சத்துக்கு சென்னை அணி வசம் வந்தார். ஷெர்ஃபேன் ரூதர்போர்ட்டை ரூ.1 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்