புனே: ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் லீக்கின் 5வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 210 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் அணி டாப் ஆர்டர் முழுவதும் ராஜஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது. கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் துவக்கம் கொடுத்தனர். இதில் கேன் வில்லியம்சன் இரண்டு ரன்களில் அவுட் ஆக, அபிஷேக் ஷர்மா 9 ரன்களில் அவுட் ஆனார். இதற்கடுத்து வந்த ராகுல் திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரன் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி நடையைக் கட்டினர். இப்படி முதல் வரிசை வீரர்கள் நால்வரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் சன்ரைசர்ஸ் அணி எட்டு ஓவர்களுக்கு உள்ளாகவே தனது மொமண்ட்டத்தை இழந்தது. பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் பவுல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் மூவரும் இணைந்து ராஜஸ்தான் அணியை சுட்ருட்டினர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்