ஐபிஎல் பட்டத்தை இருமுறை வென்றதுடன், கடந்த சீசனின் ரன்னர் அப் அணியாக வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அலைஸ் கேகேஆர். கடந்த ஆண்டு ஐபிஎல்லின் முதல் பாதியில் முதல் ஏழு லீக் ஆட்டங்களில் ஐந்தில் தோல்வி கண்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் போட்டிகள் தொடங்கிய போது ஒரு பெரிய எழுச்சியை கண்டது அந்த அணி. வெங்கடேஷ் ஐயர் அந்த அணியின் புதிய ஸ்டாராக உருவெடுத்த அதேநேரம், சுனில் நரைன் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப இறுதிப்போட்டி வரை சென்றது. முதல் பாதியில் தினேஷ் கார்த்திக் கேகேஆரை வழிநடத்திய நிலையில், இரண்டாம் பாதியில் மோர்கன் வழிநடத்தினார்.
ஆனால், இந்த இருவருமே இப்போது அணியில் இல்லை. இப்போது புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளவர் இந்தியாவின் இளம் நட்சத்திரம் ஷ்ரேயாஸ் ஐயர். இந்திய அணியின் சிறந்த வீரராகவும், டெல்லி அணியின் கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளதால் அவர் மீதான நம்பிக்கை கேகேஆர் நிர்வாகத்திடம் மட்டுமல்ல, அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. கேப்டனாக ஷ்ரேயாஸின் அணுகுமுறை கேகேஆர் அணிக்கு ஒரு புதிய பயணத்திற்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்