மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேட்ச்களை பிடிக்கத் தவறி இருந்தனர். இதில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா மட்டும் இரண்டு வாய்ப்புகளை நழுவ விட்டிருந்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட லீக் போட்டிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இந்த போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசி இருந்தது. ஆட்டத்தின் முடிவும் சென்னை அணிக்கு சாதகமாகவே அமைந்தது. தோனியின் அதிரடி பினிஷிங் டச் காரணமாக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்