அகமதாபாத்: “குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி குறித்து அடுத்த தலைமுறையினரும் பேசுவார்கள்” என சாம்பியன் பட்டம் வென்ற பிறகு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குஜராத் அணி. ஐபிஎல் களத்தில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவான புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ், அதன் முதல் சீசனிலேயே பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்தப் பட்டத்தை சில அணிகள் 15 சீசன்கள் விளையாடியும் வெல்ல முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்