மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை அணி. ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணி இந்த சீசனை 4 வெற்றி, 10 தோல்விகளுடன் நிறைவு செய்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “ஆட்டத்தை புரிந்துகொண்டு விளையாட வேண்டும். நாங்கள் சில விக்கெட்களை இழந்ததால் மொயின் அலி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு விளையாட வேண்டியது இருந்தது. விக்கெட்கள் வீழ்ந்த போது பங்கும், பொறுப்பும் மாறியது. அந்த சூழ்நிலையில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்திருந்தால் இந்த இலக்கை கூட கொடுத்திருக்க முடியாது. இருப்பினும் 10 முதல் 15 ரன்கள் குறைவாக சேர்த்துவிட்டதாகவே கருதுகிறேன்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்