ஹைதராபாத்: மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் கிரீன் அபாரமான தொடக்கத்தை கொடுத்திருந்தார். டிம் டேவிட் சிறப்பாக ஆட்டத்தை முடித்து கொடுத்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 25) ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்