மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றிக்கான ரன்களை எடுத்துக் கொடுத்தார் இந்திய வீரர் அஸ்வின். அவரது பேட்டிங் அறிவாற்றலை மனதார போற்றி உள்ளார் மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி. அந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டிரைக்கில் அஸ்வின் இருந்தார். ஆனால், அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் லாங்க்-ஆப் திசையில் பந்தை விரட்டி வெற்றிக்கான ரன்களை எடுத்தார் அஸ்வின்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்