கத்தாரில் நடைபெறும் 2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. நள்ளிரவு நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்று அபார வெற்றி பெற்றதன் காரணம், பயிற்சியாளர் சவுத்கேட் செய்த மாற்றங்களினால்தான் என்றால் மிகையல்ல.
இடைவேளை வரை இங்கிலாந்து பாஸிங், ட்ரிப்ளிங்கில் மந்தமாக இருந்ததால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், இடைவேளைக்குப்பிறகுதான் சவுத் கேட் அணியில் கொண்டு வந்த மாற்றங்கள் மிகச் சரியாக வேலை செய்தது. மார்கஸ் ராஷ்போர்ட் 50 மற்றும் 68-வது நிமிடங்களில் கோல்களை அடிக்க, 51-வது நிமிடத்தில் ஹாரி கேனின் அசிஸ்ட்டுடன் பில் ஃபோடன் ஒரு கோலை அடித்தார். 64 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வேல்ஸ் அணியின் அடுத்த சுற்றுக்கு கனவு தகர்ந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்