கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘சி’ போட்டியில், உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் சவுதி அரேபியா சற்றும் எதிர்பாராத வெற்றியைப் பெற்று, அர்ஜென்டினா ரசிகர்களுக்கும், உலக அளவில் அந்த அணியின் கால்பந்து ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதோடு குரூப் ‘சி’ பிரிவில் 3 புள்ளிகளை பெற்று முன்னிலையில் உள்ளது.
மெஸ்ஸி சாதனை வீண்! - லியோனல் மெஸ்ஸி முதல் கோலை பெனால்டி கிக்கில் அடித்து 4 உலகக் கோப்பை தொடரில் முதல் கோலை அடித்த வகையில் அர்ஜென்டினா கடந்த கால மாஸ்டர் மரடோனாவின் சாதனையைக் கடந்ததோடு நடப்பு உலகக் கோப்பையில் ஆடும் இன்னொரு ஜாம்பவானும், போர்ச்சுகல் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையையும் சமன் செய்தார். இத்தகைய மகிழ்ச்சியுடன் தொடங்கிய அர்ஜென்டினா ஆட்டம் முதல் பாதிக்கு பிறகு தடம் புரண்டது, ஏனெனில் சவுதி அரேபியாவின் அற்புதமான அட்டாக்கிங் ஆட்டமும், அதோடு சவுதி அரேபியா கோல் கீப்பர் அலோவைஸின் அபாரமான கோல் கீப்பிங்கும் அரிய வெற்றியை அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்