கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இந்தச் சூழலில் இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு நேற்று அமைந்தது. பிஎஸ்ஜி மற்றும் சவுதி ஆல் ஸ்டார் லெவன் அணிக்காக இருவரும் விளையாடிய போது இது சாத்தியமானது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடிய பிஎஸ்ஜி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. மெஸ்ஸி ஒரு கோல் பதிவு செய்தார். மறுபக்கம் ரொனால்டோ தன் அணிக்காக 2 கோல்களை பதிவு செய்தார். இவர்கள் இருவரில் யார் சிறந்தவர் என்ற ஒப்பீடுகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இதில் மெஸ்ஸியின் கை கொஞ்சம் ஓங்கி உள்ளது. இந்தச் சூழலில் இப்போது அது வேறு கட்டத்தை எட்டியுள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்