மும்பை: பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் எஞ்சியுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பையை தக்கவைத்துள்ளது இந்தியா. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 மற்றும் மார்ச் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்