துபாய்: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தனர். அதேவேளையில் லக்சயா சென் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
துபாயில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 17-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் வென் ஷி சூ-வை எதிர்த்து விளையாடினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான சிந்து 21-15, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் சிந்து, உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹன் யி-யை எதிர்கொள்கிறார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்