சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், கிருணல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் இந்த சீசனில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அணியின் பந்து வீச்சு ஆட்டத்துக்கு ஆட்டம் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தினாலும் அதிரடி பேட்டிங்கின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது மும்பை அணி. இது ஒருபுறம் இருந்தாலும் நடப்பு சாம்பியனான குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியதால்தான் மும்பை இந்தியன்ஸால் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்