புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர். கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். இளம் வீரர் திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் சேர்க்கப்படவில்லை. கே.எல்.ராகுலுக்கு புதிதாக காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் 17 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று டெல்லியில் அறிவித்தார். 20 வயதான திலக் வர்மா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்