ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டை புறக்கணித்த ஸ்மிருதி மந்தனா; டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்!

மும்பை: எதிர்வரும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் சீசனில் விளையாடும் வகையில் மகளிருக்கான பிக் பேஷ் கிரிக்கெட் லீக்கை புறக்கணிக்க இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. வணிக ரீதியான ஆதாயம் இதற்கான காரணம். ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதனால் தேசிய அணிக்காக ஆடுவதை காட்டிலும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட சில வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்