ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்று என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு அது இனிதான பயணமாக இருந்தது இல்லை. 5 முறை ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி உள்ள போதிலும் ஒரு முறைகூட அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை.
1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ‘மழை விதியால்’ தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது. ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. அதன் பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் லான்ஸ் குளூஸ்னர் போராட்டமும் வீண் ஆனது. ‘டை’-யில் முடிவடைந்த அந்த ஆட்டத்தில் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா வெளியேறியது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்