ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 17-வது ஐபிஎல் போட்டியை அடுத்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடத்த பிசிசிஐ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்த தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார் ரூட். இந்நிலையில்தான் ஜோ ரூட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்