செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 34 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 150 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது, பிசிசிஐ-யின் செயல்பாடுகள் குறித்த கடும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. உண்மையில் இந்திய அணி நம்பர் 1-ஆ என்ற கேள்வியை பிசிசிஐ கேட்டுக் கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரையே வெல்ல முடியவில்லை என்பதோடு படுமோசமான தோல்விகளை அங்குதான் சந்தித்து வருகிறது என்று வரலாறு இருக்கும் போது திட்டமிடல் இல்லாமல் ஏதோ கச்சேரிக்கோ, பிக்னிக்கிற்கோ செல்வது போல் சென்றால் இப்படித்தான் தோல்வியில் போய் முடியும் என்று தெரியாதவர்களா பிசிசிஐ-யில் டாப் பதவிகளில் இருக்கின்றனர். 2024 ஆஸ்திரேலியா தொடருக்கு முன் பிசிசிஐ விழித்துக் கொள்ளவில்லை எனில் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை, களங்களை, போட்டி ஆடப்படும் விதங்களை மாற்றி வடிவமைக்கவில்லை எனில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் இனி மெல்ல சாகும் என்பதையே நாம் உறுதியாகக் கூற முடியும்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்