ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணி வீரர்கள் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றி எளிதானது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரானது 1-1 என்றகணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அர்ஷ்தீப் சிங், அவேஷ் கானின் அனல் பறக்கும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தன.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்