26-ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கும் நிலையில் பெர்த் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு விடிமோட்சம் ஏது? வெற்றி பெறும் வாய்ப்பு உண்டா, வேகப்பந்து வீச்சு என்ன ஆனது என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
பெர்த்தில் நல்ல வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தில் பாகிஸ்தானின் முன்னணி பவுலர் ஷாஹின் ஷா அஃப்ரீடி 130 கி.மீ வேகத்தை எட்ட திணறினார். குரம் ஷேசாத், ஆமிர் ஜமால், ஃபாஹிம் அஷ்ரப் போன்றோர் 140 கி.மீ வேகத்தை எப்போதாவது எட்டினர். பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியைத் தழுவியது. 2வது இன்னிங்சில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றதும் பாகிஸ்தான் அணியைப் பற்றிய கவலையை வக்கார் யூனிஸுக்கு அதிகரிக்கச் செய்துள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்