செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்களை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணிக்காக பொறுப்புடன் பேட் செய்து வருகிறார் கே.எல்.ராகுல்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்