ராஞ்சி: ராஞ்சியில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முதல் செஷனில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது.
பெங்கால் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நல்ல வேகம் மற்றும் ஸ்விங்குடன் வீசி அறிமுக டெஸ்ட்டிலேயே முதல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவின் உருண்டு வந்த பந்தில் மட்டைக்குக் கீழ் பந்து பாம்பு போல் செல்ல பவுல்டு ஆனது. இந்தப் பிட்ச் போகப்போக எப்படி நடந்து கொள்ளும் என்பதை அறிவுறுத்தும் விதமாக இந்த விக்கெட் அமைந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்