ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பாக மாறி மாறி வரும் நிகழ்வுதான். ஆனால் ஒரு கேப்டனாக அணியை ஹர்திக் பாண்டியா சரியாக வழிநடத்துகிறாரா? என்ற கேள்விதான் அவர் மீது கணைகளாக தொடுக்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் வெற்றிக்கு 48 ரன்களே தேவையாக இருந்த நிலையில் அதைகூட மும்பை அணியால் எடுக்க முடியாமல் போனது. அந்த ஆட்டத்தில்பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்டியா 7-வது வீரராக களமிறங்கியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்